RSS

சிம்புவின் ரசிகர்கள் பார்க்கவேண்டிய வீடியோக்கள்........

http://www.extramirchi.com/wp-content/uploads/2008/06/simbu-with-radhika.jpgசிம்பு ரசிகர்களுக்கு இதுவும் ஒரு Super ஆன Video தான். என்னால முடிஞ்ச விடயங்களை தந்திருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.


சிம்பு கனடாவில் கலக்கிய விதம்.......





யுவனின் கனவுகள் நிகழ்வில் நலம்தானா? பாடல் பாடி கலக்கிய விதம்.........





நயந்தாராவை பார்த்து பாட்டுப்படிக்கிற விதம்........


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இணையத்தில் பிரவேசிக்க நல்ல Browser...

இன்டர்நெட் உலாவிற்கு ஏற்ற பிரவுசர் தொகுப்பு எது? இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் அல்லது சபாரி? இவற்றில் எது சிறந்தது? எதனைக் கொண்டு இதனை முடிவு செய்வது? அம்சங்கள், வசதிகள், வேகம், புதுமையாக உதவிடும் வசதிகள், வளைந்து கொடுக்கும் தன்மை எனப் பலவற்றை நம் பிரவுசர்கள் நமக்குத் தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சில  அடிப்படைக் கூறுகள் சிலவற்றில் அதிகமாகவும், சிலவற்றில் குறைவாகவும் உள்ளனவே! ஒவ்வொன்றாக இவற்றை இங்கு காணலாம்.
வெப் பிரவுசர் என்னும் இணைய உலாவித் தொகுப்புகள் தொடக்க காலத்தில் வந்தது போல் இப்போது இருக்க முடியாது. இன்டர் நெட்டின் தளத்தி லிருந்து டெக்ஸ் ட்டை எடுத்து உங்கள் மானிட்டரில் காட்டுவதோடு பழைய காலத்து பிரவு சரின் வேலை முடிந்து விட்டது. இப்போது ஒவ்வொரு வரும் குடி இருக்கும் இடமே இணைய தளங்கள் என்றாகிவிட்டன. அன்றாடப் பணிகளும் சிறப்பு வேலைகளும் இணையத்தில் தான் நடைபெறுகின்றன. எனவே பிரவுசர்கள் சந்திக்கும் சவால்களும் கடுமையாகிவிட்டன. ஆவணங்களைத் தயார் செய்து திருத்தவும், பயணங்கள் மேற்கொள்ளவும்பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடவும், மாப்பிள்ளை பெண் பார்க்கவும், திருமண நிச்சயதார்த்தத்தினை அறிவிக்கவும், நடந்த திருமணத்தைக் காட்டவும் என ஒவ்வொன்றுக்கும் ஒரு வெப்சைட் உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்து ஒரு இணைய உலாவித் தொகுப்பு இயங்க வேண்டியுள்ளது. வேகமாக இயங்கவில்லை என்றால், பயணத்திற்கு டிக்கட் கிடைக்காமல் போய்விடும். சரியாகத் தகவல் போய்ச் சேரவில்லை என்றால், திருமண வரன்கள் மாறிவிடும். எனவே இவற்றின் இயங்குதன்மை அனைத்திற்கும் ஈடு கொடுக்க வேண்டியுள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் அல்லது சபாரி  – இவற்றில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுப்பது அவ்வளவு எளிய காரியம் இல்லை. அனைத்து பிரவுசர்களுமே நல்ல பயனுள்ள பிரவுசர்களே. ஒன்று மற்றதைக் காட்டிலும் சில விஷயங்களில் சிறந்ததாக இருக்கலாம். இணையதளங்களை வடிவமைப்பவர்கள், தங்களின் விருப்பத்திற்கேற்ப அல்லது தாங்கள் பயன்படுத்திக் காட்டும் தொழில் நுட்பத்திற்கேற்ப ஈடு கொடுக்கும் பிரவுசரை அவர்களின் விருப்ப பிரவுசராக தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இணைய உலாவிற் கெனப் பயன்படுத்துகையில், ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கலாம். 
1.Google குரோம்
 
http://trendsupdates.com/wp-content/uploads/2010/11/GoogleChrome_11.jpgஇணைய தளங்களை வடிவமைக்கும் புரோகிராமர்களுக்கு குரோம் பதிப்பு 5 சிறந்த தோழனாக அமைந்துள்ளது. மேலும் இருக்கின்ற பிரவுசர்களில் மிக வேகமாக இயங்கி, இணையப் பக்கங்களைத் தருவதில், குரோம் முதல் இடத்தில் உள்ளது. ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் எச்.டி.எம்.எல். 5 வரையறைகளை மிக சாதுர்யமாகச் சந்தித்து இயக்குகிறது. அத்துடன் அடோப் தந்துள்ள பிளாஷ் தொகுப்பில் உருவான இயக்கங்களையும் சிறப்பாக இயக்குகிறது. இதனால் குரோம் பிரவுசர் பயன்படுத்துவதில் இடையே தடை    ஏற்படுவதே இல்லை.
http://www.myscienceisbetter.info/wp-content/upload/images/google-chrome/google-chrome-linux-flash-thumb-600x409.png
மேலும் குரோம் ப்ளக் இன் புரோகிராம்களை எளிதாகக் கையாள்கிறது. இந்த வகையில் பயர்பாக்ஸ் பிரவுசரைக் காட்டிலும் இது திறமையுடன் செயல்படுகிறது. இதனால் குரோம் பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டுக் கிடைக்கின்றன. 
Google chrome இனை Download செய்ய 
http://www.westhillchurch.net/Images/download%20button.png


2. பயர்பாக்ஸ் சோதனைத் தொகுப்பு 
http://www.ie7.com/firefox.jpgநெட்ஸ்கேப் பிரவுசர் சந்தையிலிருந்து மறைந்த போது, அதிலிருந்து பயர்பாக்ஸ் உருவானது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிற பிரவுசர்கள், இதில் உள்ள வசதிகளைக் கண்டு காப்பி அடிக்கும் அளவிற்கு, சிறப்பாய் உருவானது. தற்போது பயர்பாக்ஸ் தன் பிரவுசர் கிராஷ் ஆகி முடங்கிப் போகாமல் இருக்க ஒரு பாதுகாப்பினை உருவாக்கித் தந்துள்ளது. இதனால் அப்போது பார்க்கப்படும்  அந்த தளம் மட்டுமே முடங்கும். மற்றவற்றுடன் தொடர்ந்து நாம் பணியாற்றலாம். பயர்பாக்ஸ் பிரவுசரின் ஒரு பெரிய பலம், அதற்கென உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக் கான ஆட் ஆன் தொகுப்புகளும், ப்ளக் இன் புரோகிராம்களுமே. இணைய தள வடிவமைப்பாளர்கள் பயன்படுத்தும் ஜாவா ஸ்கிரிப்ட் குறியீடுகளை வேகமாக செயல்படுத்துவதில் பயர்பாக்ஸ், மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் பின்தங்கியே உள்ளது என்பது பலரின் குறை. ஆனால், மிக வேகமாக அவற்றை இயக்கும் வகையிலான கட்டமைப்பை விரைவில் தருவதாக மொஸில்ல்லா அறிவித்துள்ளது. 
Firefox இனை Download செய்ய 
http://www.westhillchurch.net/Images/download%20button.png
 
http://thenextweb.com/apps/files/2010/03/InternetExplorer9-300x219.jpg3. மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்  9 (சோதனைத் தொகுப்பு)

ஒரு காலத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மட்டுமே அனைவராலும் இணைய உலாவிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தக் காலம் இனி திரும்ப வருமா என்பது கேள்விக் குறியே. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், இழந்த இடத்தைப் பிடிக்க நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில், பல புதிய  வசதிகளைத் தரும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. டேப் வழி வசதி பல மாதங்களுக்கு முன் தரப்பட்டது. இதன் காலரியில் இப்போது பல ஆட் ஆன் தொகுப்புகள் கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களில் தரப்பட்ட பல புதிய விஷயங்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8ல் தரப்பட்டன. 
இணையத்தில் உலா வருகையில், வைரஸ் மற்றும் பிற கெடுதல் தரும் புரோகிராம்களிலிருந்து, மைக்ரோசாப்ட் தன்னுடைய பிரவுசர் தொகுப்பு, மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் சிறந்த பாதுகாப்பினைத் தருவதாக அறிவித்துள்ளது. குரோம் பிரவுசரைக் காட்டிலும் 5 மடங்கு, பயர்பாக்ஸ் பிரவுசரைக் காட்டிலும் 2.9 மடங்கு கூடுதல் பாதுகாப்பு தருவதாக அறிவித்துள்ளது. குறிப்பாகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் இணைய முகவரிகளைப் போலக் காட்டிக் கொள்ளும், இணைய முகவரிகளைக் கண்டறிந்து எச்சரிப்பதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகச் சிறந்தது என்று கூறியுள்ளது. 
ஆனால் இந்த பெருமையை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படிக் கூறும் மைக்ரோசாப்ட், தன் பிரவுசரில் உள்ள பல பிழையான இடங்களைச் சரிப்படுத்தும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ப்ளக் இன் புரோகிராம்களுக்கு அதிக இடம் தந்ததால், அவற்றைப் பயன்படுத்தியே பலர் தங்கள் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்புகின்றனர். 
இருப்பினும், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனேயே இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் இணைந்து வருவதால், இணைய தளத்தை வடிவமைப்பவர்கள், இந்த பிரவுசருக்கேற்றபடியாகவும் தங்கள் தளங்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படும் பிரவுசராக, இன்னும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான் உள்ளது. 
InternetExplorer இனை Download செய்ய 
http://www.westhillchurch.net/Images/download%20button.png


4. ஆப்பிள் சபாரி 5.0
  லினக்ஸ் உலகத்திலிருந்து பழைய Konqueror பிரவுசரை எடுத்து, அதில் நவீன தொழில் நுட்பத்தினை எக்கச்சக்க அளவில் புகுத்தி, விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் சபாரி பிரவுசரைக் கொண்டு வந்தது. சபாரி ஒரு நல்ல மாற்று பிரவுசராக இன்று இடம் பெற்றுள்ளது. வேகம், கண்ட்ரோல் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள டெவலப்பர் டூல்ஸ் ஆகியவை நன்றாகவே இயங்குகின்றன. இணையப் பயனாளர் ஒருவர் விரும்பும் அனைத்துமே, சபாரி பிரவுசரில் நிச்சயம் உண்டு என்று சொல்லும் அளவிற்கு, இதனை உருவாக்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.  ஆனால் மற்ற பிரவுசர்களிடமிருந்து இதனைத் தனித்துக் காட்டும் வகையில் இதில் எந்த சிறப்பும் இல்லை.  அடோப் நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள பிரச்னையின் காரணமாக, ஆப்பிள், பிளாஷ் தொகுப்பினைக் காட்டிலும், எச்.டி.எம்.எல்.5 க்கு அதிக இடம் கொடுத்துத் தொடர்ந்து அதனைச் சிறப்பான இடம் பிடிக்க உதவி வருகிறது. 
ஒவ்வொரு பிரவுசரும் ஏதேனும் சில தனிச் சிறப்பினையும், சில குறைவான வசதிகளையும் கொண்டுள்ளது. நம் தேவைகளுக்கேற்ப எது வேண்டுமோ அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஒரே பிரவுசரை மட்டுமே பயன்படுத்தாமல், ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசரைக் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துப் பயன்படுத்துவதே நமக்கு வசதியாகவும் பயனுடையதாகவும் இருக்கும்.
Apple Safari இனை Download செய்ய 
http://www.westhillchurch.net/Images/download%20button.png

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2010-ன் சிறந்த மனிதராக Facebook- Times


உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக Facebook சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை ‘டைம்’ பத்திரிகை தேர்வு செய்துள்ளது. உலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணையதளமாகFacebook விளங்குகிறது. 500 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் Facebookக்கை ஆரம்பித்து, அதை வெற்றிகரமான வர்த்தகமாகவும் மாற்றியுள்ளார் இவர். இன்று இணைய உலகின் ஜாம்பவான் கூகுளே அச்சம் கொள்ளும் அளவுக்கு பேஸ்புக் வளர்ந்து வருகிறது.
26 வயதில் இந்த சாதனையைப் படைத்துள்ள முதல் இளைஞர் ஜுக்கர்பெர்க்தான். இதற்கு முன் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் இதே வயதில் டைம் பத்திரிகையால் உலகின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரை விட 2 வாரம் இளையவர் ஜுக்கர்பெர்க். செய்தி மற்றும் கலாசாரத்தில் ஓர் ஆண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களைஆண்டுதோறும் ‘டைம்’ பத்திரிகை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக பிரவேச ஏற்பாடுகள் விறு விறுப்பாகியுள்ளன.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2M9IUIvBdJPodgUHmAkhCLzp9PlJg75dnKteV2_BdmD-tWTT3kBHK284CwTCBohAhsnLYcTiTm2ffq-UlzYUT9XGy5L6mzgVTBXe7mm0ZVinHCxnyH95ewYDTVk8snHrR-vzgF8jate8/s1600/Vijay_Kavalan_Pressmeet_stills_photos_02.jpgநடிகர் விஜய் அரசியல் பிரவேச ஏற்பாடுகள் விறு விறுப்பாகியுள்ளன. சட்ட மன்ற தேர்தலுக்கு முன் புது கட்சியை அறிவிக்கிறார். விஜய் ரசிகர் மன்றம் ஏற்கனவே மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது. அதற்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். கிராமப்புறம் வரை மக்கள் இயக்க கிளைகள் உருவாக்கப்பட்டன.
 இதன் மூலம் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி ஆதரவு திரட்டப்பட்டன. விஜய்யே நேரடியாக இறங்கி உதவிகளை வழங்கினார். இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டன. ஏழை பெண்களுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது. 108 பசு தானம், கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு உதவி என மக்கள் பணிகள் தொடர்கிறது. அரசியலில் ஈடுபடுவதற்காகவே இவை நடந்தன.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து விஜய்யை அரசியலில் ஈடுபடும்படி வற்புறுத்தி தந்திகள் குவிந்த வண்ணம் உள்ளன. கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் 25 ஆயிரம் தந்திகள் வந்துள்ளனவாம்.
இதை தொடர்ந்து ரசிகர் மன்ற நிர்வாகிகளை இரு வாரத்துக்கு முன்பு நேரில் அழைத்து பேசினார். ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக அரசியலில் ஈடுபடலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அரசியல் கட்சிக்கான வேலைகள் தீவிரமாக துவங்கியுள்ளன.
மாநாடு நடத்தி புது கட்சியை அறிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். பொங்கலையொட்டி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. பல்வேறு மாவட்டங்கள் மாநாட்டுக்காக பரிலீசிலிக்கப்பட்டன. இறுதியாக திருச்சியில் நடத்த முடிவாகியுள்ளது. மாநாட்டுக்கு அனைத்து ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கானோரை வர வழைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
கட்சி பெயர், கொடி போன்றவை குறித்து முக்கியஸ்தர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். திராவிட என்ற வார்த்தை இடம் பெறும் வகையில் கட்சி பெயரை உருவாக்குகின்றனர். கொடியும் இரு வண்ணங்களில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மாநாட்டிலேயே கட்சிக்கு தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும் அறிவிக்கப்பட உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது பிற கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா? என்பது பற்றியும் மாநாட்டில் முடிவெடுத்து அறிவிக்கப்படுகிறது.
விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். எனவே தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு விஜய் கட்சி ஆதரவு அளிக்கும் என்று யூகங்கள் கிளம்பியுள்ளன.
தேர்தலில் விஜய் போட்டியிட வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தியுள்ளனர். திருச்சி, கோவை ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய்க்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கணித்துள்ளனர். தேர்தலில் போட்டியிட்டால் திருச்சி தொகுதியில் நிற்பார் என்று தெரிகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS